Tuesday, 31 December 2013

என் காதலின் தவிப்பு

சந்தனப்பேழை ஒன்றில் 
எவரொருவர் கண்டிடாமல் 
இறுக்கமாய் மூடிவைத்தேன் 
என் காதல் நினைவுகளை...

முட்டி மோதிப் பார்த்துவிட்டு 
காற்றோடு கைகோத்து 
கதவிடுக்கில் வெளியேறி...

காதலை சொல்லிவருகிறது 
கதைகதையாய்....
மூச்சுக்காற்றில் தெளித்துவிட்ட
சந்தனத்தின் வாசனையாய்...


ஜெகன் லக்ஷ்மி 

No comments:

Post a Comment