Tuesday 31 December 2013

ரசனை

எனது சிறுபிள்ளைத் 
தனமான பேச்சுக்களை 
ரசித்தார்கள் !
எனது மௌனமான 
நற்குணங்களைப் பழித்தார்கள் !
என்ன உலகமிது என 
யோசித்துக் கொண்டிருக்கையில் 
அங்கே பிறந்தது 
எனக்கான தனி உலகம்..
ஆளரவமற்ற தனிமை
எங்கெங்கும் நிம்மதியின் நிழல் !
உயிரைப் பழிக்கும்
எந்த முரணுமில்லை
என்னைச் சுற்றி இப்போது !
மலையருவி முத்தமிட்டுக்
குளிர்விக்கும்
மஞ்சள் பூக்களின் புன்னகை
எவ்வளவு அழகோ
அவ்வளவு அழகாய்
அமைதியாய்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் !


ஜெகன் லக்ஷ்மி 

No comments:

Post a Comment